Wednesday, June 23, 2010

காதல் ஆதலால்..


உனது வருகைக்குரிய
அன்பின் தடங்கள்..
ஒரு காத்திருப்பின்
பரிச்சயத்தை ஆயாசமாய்
அள்ளி முகர்கிறது,
ஒரு தாயின் மாரில்
குழந்தைகள் மருகுவதென .

ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .

ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .

12 comments:

Ashok D said...

கடைசி பத்தி :)

கமலேஷ் said...

கடைசியா முடித்த வரிகள் மிக அருமையாக இருக்கிறது நண்பரே...

VELU.G said...

//ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .
//
அருமை நண்பரே

super ஆன முடிவு

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .//

இது யோசிக்க வச்சுது சூப்பர்ப் பாஸ்...

செ.சரவணக்குமார் said...

நல்ல வரிகளில் உணர்ந்து ரசிக்கும்படியான ஒரு கவிதை.

மிகப் பிடித்திருக்கிறது ஆறுமுகம்.

ஹேமா said...

பொதுவில் காதல் எளிதல்ல.
அதிலும் காத்திருப்பதும் நிராகரிக்கப்படுவதும் !

உயிரோடை said...

காத்திருத்த‌ல் கொடும் த‌ண்ட‌னை. ம்ம் க‌டைசி ப‌த்தி ந‌ச்ன்னு இருக்கு

Unknown said...

நன்றி அசோக்.

நன்றி கமலேஷ்.

நன்றி வேலு.

நன்றி வசந்த்.

Unknown said...

நன்றி சரவணக்குமார் அண்ணா.

நன்றி ஹேமா.

நன்றி உயிரோடை.

முடிவிலி said...

மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது ///
மச்சான் துடிப்ப்புள்ள வரிகள் டா....... காத்திருத்தலின் மௌனம் பல சொற்களை / சொற்றொடர்களை பிணைந்து உருவாக்கப்பட்டது ..... நிறைய எழுது மாம்ஸ் ............

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமை நண்பா

Unknown said...

அருமை நண்பரே