Tuesday, April 27, 2010

நேசங்களின் கூவல்..



பயணங்களில்,
பின்னிருக்கைகளின்..
தடம்பதிந்த வெற்றிலைச்சிவப்பில்
அடையாளப்படுத்தப்படும்
அவர்கள் முதியவர்களென..

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகள் வளர்க்கும்
மழலைகளின் வயது கண்டு
தேடல்கள் தற்காலிகப்படநேரும்.

ஓரர்த்த ராத்திரியில்,
யர யரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..

நட்சத்திரங்களை வாசிப்பவர்கள்
இப்-போதைக்குக் குறைவென்றே
இருத்தல் கூடும்.

அவள் வராத வருகையை
சில பொழுதுகளில்
மழையுரைத்து நகர தீரும்!

நேசங்கள்..
நெய்திருந்த கவிதைகள்
நிரம்பி இசையும் காற்று வீசியதும்
முடிவுற்றிருக்கும் ஒரு மரணம்.!


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2833


நன்றி யிர்மை.

7 comments:

ny said...

ஓரர்த்த ராத்திரியில்,
உயர உயரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..

class!

ரசிகன்! said...

ஓரர்த்த ராத்திரியில்,
உயர உயரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..
//


excellent... beautiful thala :)

rvelkannan said...

நிரம்பி இசையும் காற்று வீசியதும்
முடிவுற்றிருக்கும் ஒரு மரணம்.!

That line very impressed me...!

hemikrish said...

பயணங்களில்,
பின்னிருக்கைகளின்..
தடம்பதிந்த வெற்றிலைச்சிவப்பில்
அடையாளப்படுத்தப்படும்
அவர்கள் முதியவர்களென..//


ஓரர்த்த ராத்திரியில்,
உயர உயரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..

நட்சத்திரங்களை வாசிப்பவர்கள்
இப்-போதைக்குக் குறைவென்றே
இருத்தல் கூடும்.//


mika arumai arumukam....


நேசங்கள்..
நெய்திருந்த கவிதைகள்
நிரம்பி இசையும் காற்று வீசியதும்
முடிவுற்றிருக்கும் ஒரு மரணம்.!//

chanceless.....mudivu peraamal ezhuthungal innum.:-)

Unknown said...

:-)

நன்றி நேசமித்ரன்

நன்றி கார்த்தி

நன்றி ரசிகன்

நன்றி வேல்கண்ணன்

நன்றி ஹேமிகிரிஷ்

Gowripriya said...

superb :))

Unknown said...

நன்றி கௌரிப் பிரியா..