Monday, April 12, 2010

ஓர் யுகத்திற்கான கனவு..

சற்றும் எதிர்நோக்கவில்லை
சடாரென கடந்திருந்தது
துளியென அவ்வொலி..

சுதாகரிப்பின்முன்
காலியாகியிருந்தது அந்நிமிடம் !

மிகநீண்ட மௌனம்..
ஒருவித மென்மயக்க இசையை
நெகிழ்ச்சியுடன் மீட்டுவதாய், அவள்
புன்னகைக்க தயார்படுத்துகிறாள் தன்னை..!

தேநீரின் சிணுங்கலில்
வெட்கம் தாங்காது மாலை
இனிப்புறுகிறது !!

சற்றும் எதிர்நோக்காத
அவ்வருகைக்கான காத்திருப்பு,
மூச்சுக்காற்றில் உவகை
உமிழ்ந்த வண்ணம்...........
ஓர் யுகத்திற்கான கனவை,
காதலென அரிதாரம் பூசி..
ஆர்ப்பாட்டத்திருவிழா துவக்குவதாய்
பெருத்த மழைக்கு தயாராகிறது வானம்.. !

 http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2759

நன்றி உயிர்மை.

2 comments:

நேசமித்ரன் said...

:)

நல்லா முடிச்சுருக்கீங்க

Unknown said...

ரொம்ப நன்றி நேசமித்ரன்..