Monday, April 12, 2010

அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன

மிகைப்படியான யோசித்தல்
ஒருசில சமயங்களில்
ஒன்றும் புரிபடுவதில்லை..

அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும்
பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த
வால் சிறுவனையும் அழைத்து
"தன் நீலநிற புதிய  பீ-எம்-டபுள்யு" வினில்
ஊர்சுற்றி வருவதாக சொல்லிச்சென்றவன்
இன்னும் வீடு திரும்பவில்லை..

மூவரும் இணைந்து விளையாடும்
புகைப்படமொன்றின் கதவு
அவரை வெறித்து நோக்கியது ..!!

மிகைப்படியான யோசித்தல்
ஒரு சில சமயங்களில்.....

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004113&format=html

நன்றி திண்ணை..

2 comments:

Nafil said...

சொன்ன அந்த தந்தைக்கு இன்னும் கிட்டவில்லை பீ-எம்-டபுள்யு கார். தன் குழந்தைகளின் ஆசையை தீர்க்க தான்
அந்நிய நாட்டில் ஆயிரம் தந்தைகள் .......,


நல்ல யோசனை ஆறு...,

Unknown said...

ரொம்ப நன்றி நபில்..