Monday, April 5, 2010

மரணத்தில் நனைதல்..


தாடி மழிக்கும் நேரத்தில்,
நேற்றைய அணைப்பில்
கழன்டோடிய பொத்தானை மீட்டெடுத்து
அதனுள் பொதிந்துவைத்திருப்பாள்
ரகசிய முத்தமொன்றை அப்பெண்..!

அலுவல் சென்று திரும்பும்வரை
இருவர்  மண்டைக்குள்ளும்
ருசி கொண்டிருக்கும்
அவ்விடைவெளி முத்தம்..!

டிபன்பாக்ஸின் சப்பிய வலதோரத்தில்
அவளுக்கான பருக்கைகள் ஒட்டிக்கொண்டிருந்ததை
எப்படியும் இரவின் புணர்தலில்
உச்சந்தலையில் நனையும் முத்தத்தில்
முனகி வைப்பாள் !

பின்பொரு அகாலத்தில்
அப்பெண்ணின் முதுகு மச்சத்தில்
மிச்சப்பட்டிருப்பேன் நான்
அவளறியாது !!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2730

நன்றி உயிர்மை..

2 comments:

கவிதன் said...

அற்புதமா இருக்கு!!! கலக்குற!!! தொடரட்டும்......

உயிர்மை இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

Unknown said...

ரொம்ப நன்றி கார்த்திக்..