Friday, April 2, 2010

தனிமை விழுங்கும் தோல்வி.!

"யாருமில்லா இடமொன்றில்
ஓவென்று அழுவதாய்" 
தொடங்கும் பாடலொன்றிலிருந்து
நைசாக நழுவுவதென
வேகமாக வந்துவிடுகிறார்கள்..

நெடுநேரம் பேசுகிறார்கள்,
நட்பின் கை கொண்டு
காதலின் தோள் பற்றியேறி
காமத்தின் கதவு முன்நின்று
ஏனோ உள்செல்ல தயங்கி
மௌனமாக திரும்பி விடுகிறார்கள்.!

பின்னொரு நாள்
சம்மதமேதுமில்லாத
நம்பிக்கை மனிதர்கள்
நைசாக தட்டிவிடுகின்றனர், 
ஒலிக்கத்துவங்குகிறது..
"யாருமில்லா இடமொன்றிலென துவங்கும் பாடலொன்று.."  


http://www.vaarppu.com/view/2133/ 
நன்றி வார்ப்பு..

2 comments:

கவிதன் said...

உணர்வுகள் வார்த்தைகளாய் தயக்கமேதுமின்றி கவிதைக்குள் நைசாக நழுவி விழுகின்றன.....
அருமையான படைப்பு ஆறுமுகம்!

வார்ப்பில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா!

Unknown said...

ரொம்ப நன்றி கார்த்திக்..