Sunday, March 4, 2012
இனி
அகாலத்தின் நிசப்த தெருவில்
உடலுதிர்ந்த இறகென தனித்தலைகிறே ன்
பிரிவின் துயர்
நிலா விழுங்கும் பௌர்ணமி கடலென
அதி பிரகாசமாய்.
என்னுள் உடைந்து-அழுகும்
ஞாபகக் கீறல்களை
மாம்ச விருப்புடன்
அலகு முட்டிச் செல்ல
தாழப் பறந்து கொண்டிருக்கிறது
பிணந்தின்னிக் கழுகொன்று.
ரயில் பாலம் அருகே
இனி நீ வரத் தேவையில்லை
பயந்து பயந்தவாறே!
காதலாதல்
மழைநீர்க் கோடுகளெனப் பதிந்திருக்கும்
உனது விரல் ரேகைகள்,
அழகழகான வண்ணங்கள் நிறைந்த
வரைபட வீட்டின் தனிமை போல்
அல்லது
தரப்படாத யாசகக் காசின் கணம் ஒத்த
ஏழ்மைக் குழந்தையின் தத்தளிக்கும் இதயம் போல்
என அறிந்த நிமிடத்தில்
யாதொரு யோசனையுமற்று
உனது கரங்களைப் பற்றிச் செல்கிறேன்
நம் காதல் இதுவரை கண்டிராத
ஓர் மர்மக் குகையின் அற்றத்திற்கு.
நன்றி உயிரோசை
Friday, March 2, 2012
ஒற்றைப் புறந்தள்ளலில் உலகை ஒடித்தல்
தெய்வத்தின் சன்னமான குரலில்
சீழ் வடிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்
நீ எதை நிரூபிக்க இத்தனைப்
பிரயாசையோடு எத்தனிக்கிறாய்
மனம் ஒரு பெருங்கிடங்கி
உனது அனுமானங்களையெல்லாம்
அதனில் இட்டு வை
மதுவைக் குடித்து
பெண்ணைத் தின்று
அடுத்த கணத்திற்கு குரூரமாய் முன்னேறு
பனிக்குடம் உடைந்து அலறும் மகப்பேறு
பெண்ணின் அவ்வொலியை
இசைக் குறிப்பெனக் குறிப்பெடு
அவர்கள் இப்படித் தான்
யாரையும் எதற்கெனினும் எப்பொழுதும்
குற்றம் கூறிக் கொண்டுதானிருப்பார்கள்
நீ உன் குற்றத்தை
முலைக்கழும் கைப்பிள்ளையின்
தசை திருகி வெடிச்சிரிப்போடு கடந்து செல்
நீ எத்தனை முறை எப்படிக் கூவினாலும்
மனம் பிறழ்ந்தவனென உன்னை
யாரும் அடையாளப்படுத்தமாட்டார்கள்
ஒவ்வொருவரும் தங்கள் முக மூடியை
தெய்வத்தின் சீழ் வடியும் குரலிலிருந்து
அவ்வளவு தத்ரூபமாய் செய்து வைத்திருக்கிறார்கள்
ஒரு நிசப்தமான இரவில்
முட்டக் குடித்துவிட்டுநீயே
தற்கொலை செய்துகொள் உன்னை.
நன்றி உயிரோசை
சீழ் வடிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்
நீ எதை நிரூபிக்க இத்தனைப்
பிரயாசையோடு எத்தனிக்கிறாய்
மனம் ஒரு பெருங்கிடங்கி
உனது அனுமானங்களையெல்லாம்
அதனில் இட்டு வை
மதுவைக் குடித்து
பெண்ணைத் தின்று
அடுத்த கணத்திற்கு குரூரமாய் முன்னேறு
பனிக்குடம் உடைந்து அலறும் மகப்பேறு
பெண்ணின் அவ்வொலியை
இசைக் குறிப்பெனக் குறிப்பெடு
அவர்கள் இப்படித் தான்
யாரையும் எதற்கெனினும் எப்பொழுதும்
குற்றம் கூறிக் கொண்டுதானிருப்பார்கள்
நீ உன் குற்றத்தை
முலைக்கழும் கைப்பிள்ளையின்
தசை திருகி வெடிச்சிரிப்போடு கடந்து செல்
நீ எத்தனை முறை எப்படிக் கூவினாலும்
மனம் பிறழ்ந்தவனென உன்னை
யாரும் அடையாளப்படுத்தமாட்டார்கள்
ஒவ்வொருவரும் தங்கள் முக மூடியை
தெய்வத்தின் சீழ் வடியும் குரலிலிருந்து
அவ்வளவு தத்ரூபமாய் செய்து வைத்திருக்கிறார்கள்
ஒரு நிசப்தமான இரவில்
முட்டக் குடித்துவிட்டுநீயே
தற்கொலை செய்துகொள் உன்னை.
நன்றி உயிரோசை
Sunday, February 19, 2012
நீ அறிவாயோ?
துளி விசமென நனைக்கிறது
உன் மௌனம் உடைத்த சொற்கள்
என் காதலின் கண்ணாடியை
பிராயத்தின் நகலென வெறுமென நகர்ந்து
அதனை மறப்பதில்
மிகுந்த தயக்கம்
எனக்கும்
பெருங்கடல் தகர்ந்த இச்சிறு கணத்திற்கும்.
நன்றி உயிரோசை..
முத்தத்திற்குப் பின்பும் முத்தம்
ஆகாசம் உடைந்து வீழும்
இவ் அகாலத்தில்
நீ உடை மாற்றுகிறாய்
அன்யோன்யத்தின் அசதியில்
எனக்கிந்த அம்மணமே போதும்
இப்பேரிரவைப் பருக
விரல்களுக்குள் மூழ்கும் விரல்களிடமிருந்து
காமத்திற்கு கற்றுத் தருவோம்
காதலின் வெயிலை
காதலின் ஈரத்தை
காதலின் ஸ்பரிசத்தை
காதலின் பேரன்பை.
நன்றி உயிரோசை..
Tuesday, February 14, 2012
Subscribe to:
Posts (Atom)









