Saturday, September 28, 2013

காற்றில் உடையும் அழுகையின் குரல்





மிருதுளா
தன் சின்னச் சின்னப் பாதங்களால்
வீடு நிறைய அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறாள்

வீங்கிய மௌனத்தின் விஷப்பற்கள் திறந்து
முடிவாகச் சொல்லிவிட்டாள்
வித்யா

கண்ணாடியில் மண்புழு ஊர்வதென
பிரதியிட்டப் பார்வையுடன் அமர்ந்திருந்தான்
பிரவீன்

சின்னச் சின்னப் பாதங்கள் உருண்டு
வெறுமனே குரலாகி உதிர்ந்தது
பெருவெளியெங்கும் அழுகையின் கேவல்

நீ தான் சாத்தான்..
நீ தான் துர்தேவதை...
என மாற்றி மாற்றி விரல்நீட்டிக்கொண்டிருந்தார்கள்  
காலத்தின் கதாப்பாத்திரங்கள்


No comments: