Sunday, September 1, 2013

ஆனந்தனும் மனோவும்






எதிர்கொள்ளமுடியாத புறக்கணிப்பிலும்
கெக்கலிப்பிலுமிருந்து
வெளியேறிய
முதல் நாள் அது

கூட்டமாகப் பறந்துகொண்டிருக்கிற
தும்பிகளென
அன்று
வெயிலை ரசித்துக்கொண்டிருந்தான்
நீண்டநேரமாக
ஆனந்தன்

சைலன்ட் மோடில் கிடந்த போஃன்
ஆனந்தனின் சட்டைப்பையை
“விங் விங்.. என்று” முட்டுகிறது,
அவனது மௌனக்குரலை உணர்ந்தவனாய்
இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவதாக
சொல்கிறான்
எதிர்முனையில் மனோ

வானம் அடர்கறுத்து
மழைக்கான
தாமதத்தில்
ஆனந்தனின் சொட்டுக்கண்ணீர் தரை தழுவவும்
மனோ ஆனந்தனின் முதுகினை பற்றவும்
சரி கணமாக அமைந்தது

தாங்கள் ஓரினப்பாலுணர்ச்சியாளர்கள் என்பதில்
குற்றபோதம் எதுவுமில்லை
அவர்களுக்கு

புரிபடாத பாஷைகள்
ஒரு பந்தினைப்போல உருண்டு
பலரையும் எதிர்கொள்ள
வெளிச்சக்கீற்றின் ஊடே நிசப்தமாக கலந்து
வெகுதூரம்
கடந்திருந்தார்கள்
ஆனந்தனும் மனோவும்.  

No comments: