Sunday, September 1, 2013

ஆராதனா எனும் பேய் 51






அகோரப் பசியெடுத்து நிற்கும் என்னை
விழுங்கப் போகும் முன்
உன்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஆராதனா..

புணர்ச்சிக்குப் பிறகு
மார்காம்புகள் வலிக்கிறதென்ற
மேலும் கூடதலான காதலை
என்னிடம் சொல்லி முத்தமிடாதே

வாழ்தல் விடுத்து மரணத்தில் ஒழுகிவிடுவேன் நான்

இல்லை இல்லை என்று சொல்லி நெருங்கி அணைக்கும்
உன்னை
எந்த தொட்டிலில் தாலாட்டுவது 

No comments: