Saturday, March 23, 2013

ச் என்றால் நீ, சீ என்றால் நீங்கள், ச்சீ என்றால் நான்




இந்த மன நிலையை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள
நின்று கொண்டிருப்பது
திருட்டுப் பூனையின் அடுப்பங்கரை வெயில்

மேலும்  

அவளது சீலையின் வியர்வைக் குளிரின்
ஒற்றையடிப் பாதையில்
குருட்டுக் கண்களோடு துயில் எழுவது
நண்பனின் நம்பிக்கை

அவ்வளவே.


Friday, March 22, 2013

***




தாமதமாக வந்திறங்கிய ப்ரேதம்
மனுஷ உடல்

யாரும் பதற்றம் அடையாதீர்கள்




மனம் பிறழ்ந்தவன்
கையில் அடைந்த ரோஜாவாகிச்
சாகும் அவள்
முன்

நானே ஆனேன்
அவன்.

பிறகு




முடிச்சிடப்பட்ட ரகசியங்களின் மேல்
மூத்திரம் பெய்யும் நாய்களாகிய
உங்களுக்கு
ஞாபகம் இல்லையா
பிசாஸின் குரல்

ஏதோ ஞாபகத்தில் எழுந்து நடக்கிறேன்
நானும்


***




ஒவ்வொரு துளி நதியிலும்
ஒவ்வொரு துளிக்
கடல்


ஆராதனா எனும் பேய் 41




நன்றாக ஞாபகம் இருக்கிறது
திருச்சிராப்பள்ளி ரெயில்வே ஸ்டேசனும்
கலசல கலசலக் கூட்டமும்
உனக்கு நினைவில் வழிகிறதா ஆராதனா
அந்த முத்தமும்
பெருங்காதலெனப் படர்ந்தக் கண்ணீரும்

தொடர்ந்த முத்தம் ஒரு வதை




கேவல்கள் கூடிச் சிதறும் கண்கள்
கொத்தி உமிழும் கணம்
பிரிந்து செல்தல் வாதை

தொடர்ந்த முத்தம் ஒரு வதை

இந்தக் குளிர் காற்று
ஏன் இவ்வளவு வெயிலில் மிதக்கிறது

சுண்டல்காரப் பையன்
கல கலவெனச் சிரிப்புருளும் தர்ப்பூசணி யுவதி
என்ன வித்தியாசம்?

தெரிக்குது
நாயி..
நாய்யி..
ஓரமா போயித்தொலைடா

( 7.15 PM )
ஷங்கர் கொஞ்சம் நேரத்த வரேன்னார்

இப்பலாம் வர வர ஜாஸ்தி சிக்கடிக்க ஆரம்பிச்சுடுச்சு
ஆபாயில்னா அதுக்கு உயிர்

ம்,
ஒரேயொரு முத்தம்..

ம்
.......
.......

தொடர்ந்த முத்தம் ஒரு வதை

***

***




எத்தனை பட்டாம்பூச்சிகள் பறக்கிறது
இம்மனதுள்
ஒற்றை அந்தியில்
ஒரு நீ

போதும் இவ்வுலகு.


***





பார்க்கவே கூடாத சமயத்தில்
திரும்பியிருந்த தொலைவில்
நீ இல்லை


அவ்வளவே




மழுங்கடிக்கப்பட்ட இந்த மண்டைக்குள்
சுற்றிக்கொண்டிருப்பது
கூர் தீட்டப்பட்ட கத்தி.

அப்புறம் ,

சுகமாகக் காற்று வீசும்
இந்த அறையில்
ஊர்ந்து கொண்டிருந்தது
அந்தத் தடித்த சர்ப்பம்