Saturday, March 31, 2012

உன்னைக் கொன்று என்னில் புதைப்பதென்பது..





குளத்தில் இட்டது
ஞாபகக் கூட்டத்தின் கூழாங்கல்லா
அல்லது
நினைவுச் செருகலின் மதம் பிடித்து
குழம்பிச் செத்த
"நானெனும்" சாத்தானையா?

....................




என்னைக் கொன்று குழித்தபோதும்
உன்னையே அசை போட்டுக் கொண்டிருக்கிறது
எனது நினைவு..
அதற்கு பேரன்பு எனப் பெயரிடுவதா
அல்லது
பிசாசென மனம் பிறழ்வதா?!

....................







நிராகரிப்பின் தெவிட்டலில்
பிணம் பற்றி எரியும்
இடுகாட்டமைதி!

மரணத்தின் உதடுகளில்..







ஏந்தப்படாத முத்தங்களின்
அசூயையென
பிளந்து நிற்கிறது
ஒரு வாய்க்கரிசி
மரணம்.

....................








புறக்கணிப்பை புரியும்படியாகச் சொல்லென்றேன்
மௌனத்தை இன்னும் கூர்மையாக
சொருகிவிட்டுப் போகிறாய்

....................








துயரத்தைக் கொண்டாடத் தெரியுமெனக்கு என்றேன்
நம்ப மறுத்து நிராகரிக்கிறாய்
ஒரு நம்பும்படியான பொய்யோடு

....................








கருணையே ஒரு கொலை தான்
பிறகெதற்கு கருணைக் கொலை?

கொலை உத்தமம்
அதனினும் சிறந்தது
தற்கொலைக்குத் தூண்டுதல்

Tuesday, March 27, 2012

அடுத்த கணம்!




கனவில் தொலைவேன் நானும் என்னுடன் கூடி
அந்நாள்
அழ அழ அழாதே
ஒரு குழந்தையைப் போன்றோ
அல்லது
முகமூடி அணிந்திருக்கும்
ஒரு கோமாளியைப் போன்றோ!


உயிர்த்திருப்பு!







மௌனமெனும் மந்திரச் சொல்லைக்
கொத்திக் கொத்தி
தின்று கொண்டிருக்கிறது
அன்பெனும் நீர்ப்பறவை!  



நன்றி உயிரோசை 


அன்பென்பது நோயல்ல







அன்பு என்பது ஒரு தீரப்பெறாத நோயென விழைந்த
எனதந்த ஒரு முழுப் புரியாமையை
மிகச் சுலபமாய் மேலுமொரு
அன்பின் கண்ணி கொண்டு
என்னை வாழப் பணிக்கிறாயெனும்போது
ஒரு தற்கொலை எண்ணம்
எனது தற்கொலையிலிருந்து
எத்தனை தொலைவு மீளச் செய்கிறது
என்பதை நானொரு கவிதை வடிவில்
எப்படி பதிவு செய்வேன்!


நன்றி உயிரோசை