Saturday, March 31, 2012
Tuesday, March 27, 2012
உயிர்த்திருப்பு!
மௌனமெனும் மந்திரச் சொல்லைக்
கொத்திக் கொத்தி
தின்று கொண்டிருக்கிறது
அன்பெனும் நீர்ப்பறவை!
நன்றி உயிரோசை
அன்பென்பது நோயல்ல
அன்பு என்பது ஒரு தீரப்பெறாத நோயென விழைந்த
எனதந்த ஒரு முழுப் புரியாமையை
மிகச் சுலபமாய் மேலுமொரு
அன்பின் கண்ணி கொண்டு
என்னை வாழப் பணிக்கிறாயெனும்போது
ஒரு தற்கொலை எண்ணம்
எனது தற்கொலையிலிருந்து
எத்தனை தொலைவு மீளச் செய்கிறது
என்பதை நானொரு கவிதை வடிவில்
எப்படி பதிவு செய்வேன்!
நன்றி உயிரோசை
Subscribe to:
Posts (Atom)









