Sunday, November 1, 2009

காதலாகி.. உயிராகி.. பின்..,


ஜன்னலோர பிள்ளையினை
தொடரும் நீண்டபுன்னகையாய்
காதல் எங்கள் தோளேறி
உலகே பொறாமைகொண்டோட
பிரயாணிக்கின்றோம்..

யாருமற்ற இரவொன்றில்
கன்னத்தில் பதியென்றால்
முதுகினில் முலையழுந்த
பின்னங்கழுத்தினில் நதியினைபோல்
முத்தங்களோடு தலைகோதுகின்றாள்..

வழக்கிற்கெதிராக
என்மடியினில் அவள் தலைசாய
நெடுநேரம் தொலைய
காதலுக்கு காய்ச்சல்..!

நட்சத்திரங்கள் வெட்கத்தில்
பால்நிலவும் பங்கிட்டுக்கொள்ள
வானம் சிவக்கின்றது..

மறுநாள்
எங்களின் முன்பே
காத்திருந்த காதல்
தேடியோடி..
தேடியோடி.. இன்று
ஒருகிழவன் .. ஒருகிழவி
முன்பைவிட காதல்
கூடுதலாகியே தீர்கிறது நாட்கள்..

No comments: