Monday, October 25, 2010
வெற்றுடல் தேவதைகள்..
முகங்களற்ற
நிழல்களற்ற
மழை பூத்த சாலையில்
இன்னல் தனிமையைத் தூவிச் செல்வதற்கென
அமையப்பெறுகிறது அவனுக்கு
அம்மதியப்பயணம்..
தலை நொடித்து கற்கள் கொஞ்சத்தை
உள்ளங்கை தனில் அடுக்கிக்கொண்டு
சாலையின் கடைசி வளைவில்
கால் மடித்துக் கொள்கிறான்.
கற்கள் ஒவ்வொன்றாகத் தொலைபடுகிறது..
தனித்த கைகளாகிய நிலையினில்
ஒரு அமைதியை அடையாளப் படுத்துகிறான்,
அமைதி அதன்பொருட்டு
அமைதியைத் தருவிக்கிறது..!
கன்னம்வழி வளர்ந்த நீரில்
கடுமையாக உப்பின் வாசம்..
காற்று கொணர்ந்த இசையில்
உப்பின் அடர்த்தி குறையக் குறைய..
பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது.
நன்றி உயிரோசை..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
/ பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது. /
:(
கவிதைக்கு
:)
கவிதை நல்லாயிருக்குங்க.
கவிதை நன்று வாழ்த்துகளும் கூட
நிறைவு வரிகள் நெஞ்சில் நிறைகின்றன...!! அருமை!!
Post a Comment