Monday, December 6, 2010

அரேபிய ராசாக்கள் 14..






அமர்ந்த நாற்காலியில் இல்லாத நான்
கண்களை அகல விரித்தபோது
நகரும் படிக்கட்டுகளில்
நின்று கொண்டிருந்தேன்..

அரேபியப் புழுதியை
இதயத்தில் ஒத்தி
சற்று கைகளை நீட்டியபொழுது
ஆகச்சிறந்த நொடி இதுவென
கவனம் உணர்ந்தேன்..

மதியம் உண்கையில்
அம்மாவின் ஈரப்புனகை
சாம்பாரில் இனித்தது..

பின்-மாலைப்பொழுதில்
பிரிவு அறிந்தவர்கள்
சாக்லேட் புன்னகையோடு
சிறகுப்பறவை பறந்ததையும்
அழகுப்பெண் வணக்கத்தையும்
காதுகளில் முத்தம் கொண்டனர்..

அடர்வர்ண காலங்களில்
எனத் தொடங்கப்பட்ட
உரையாடலின் நடுநடுவே
ஈச்சமர வாடையும்
மணல் அலையும்
வந்து வந்து ஒட்டிக்கொள்கிறது..

இரவு உறங்கப் போகையில்
அப்பாவின் விரல்களில்
அன்பை பரிசுத்தமாகப்
பரிச்சயம் கண்டது
உச்சந்தலை..

விடுமுறை தீருமுன்
எப்படியாவது
காதலைச் சொல்லியாக வேண்டும்
கூடப் படுப்பவளிடம்..

பாட்டி தாத்தாவோடு
கதைபேசும் வெண்ணிலாவை
இம்முறையும்
கூட்டிப்போவதாகயில்லை
விமான வாசல்.


நன்றி உயிரோசை..

4 comments:

ரசிகன்! said...

onnum solradhukkillae... niraiya kathukkaran.... :)

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ் சௌக்கியமா?

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு

Jayasree said...
This comment has been removed by the author.